நீ என்று புலப்படுவாய்
உனது மௌனம் எனக்குப் புலப்படாதா என்று
அதன் சூட்சும ஓசையின் ஆழத்தில்
பயணித்தேன்.
உனது மௌன மழையின் இடியோசை
மின்னலோடு என்னில் புதைகிறது.
மௌனம் காக்கும் உன் இதழ்களில்
மௌனம் காக்கும் உன் கண்களில்
உட்புதைந்த பொருள் குறித்து
என் ஆன்மா விடை தேடி அலைகிறது.
உன் மௌனம் எனும்
வெட்டவெளி பரப்பில்
தொலைந்து போனவன் நான்.
என்னை நானே தேடிக் கரைந்தேன்.
உன்னில் நான் அகப்படும் அன்று
நீ எனக்குப் புலப்படுவாயா !
தனுஷ்