எனது கடவுள்
எனக்குள் இருக்கும் பிசாசிற்குத்
தீனி நான்தான்
எனக்குள் இருக்கும் கடவுளுக்கு
அருந்தக் கொடுப்பேன்
எனது இரத்தத்தை
இறந்த காலம்
அசைபோடுவதற்கும்
நிகழ்காலம்
அனுபவிப்பதற்கும்
இருக்கும் போது
எதிர்காலம் மட்டும் ஏன்
இருளைப் போர்த்துக் கொண்டிருக்கிறது
என்று கடவுளிடம் கேட்டேன்
அப்போதுதான்
என் இருப்பு உனக்கும்
புரியும் என்றார்
கடவுளின் உருவம்
டிராகுலாவின்
பற்களாக இருட்டில்
இரத்தம் சொட்டியது
தனுஷ்
உலகில் அதிக சக்தி வாய்ந்தது உண்மையைத் தவிர வேறேதுமில்லை. ஆனால் அதை நெருங்கவே நாம் தயங்குகிறோம். அந்த தயக்கத்தை நாம் உடைத்தெறியலாம். அதற்கான தயாரிப்பிற்கு கொஞ்சம் உவப்பத் தலை கூடலாம். அதற்காகவே இந்த வலைப்பூ
ஞாயிறு, 4 ஜூலை, 2010
சுயம்
இறைவனிடம் கேட்டேன்
நான் யார்
அவர் மௌனமாக இரு
என்றார்
அப்படியானால்
மௌனம் நானா
இறைவியிடமும் கேட்டேன்
நான் யார் என்று
அவள் சிரித்தாள்
நானும் இதேக் கேள்வியை
அவரிடம் கேட்டிருக்கிறேன்
அவர் என்னையும்
மௌனமாக இரு என்றுதான் சொன்னார்
என்று ஆர்ப்பரித்துச் சிரித்தாள்
அப்போது அபூர்வமான மலர்கள்
தெய்வீக மணத்தோடு
உலகமெங்கும்
மலையென சொறிந்தன
நான் அந்த மலர்களில் ஒருவனாகக்
மலர்ந்திருந்தேன்
என் மீது மலர்கள் போர்த்து
மறைத்தன
தனுஷ்
இறைவனிடம் கேட்டேன்
நான் யார்
அவர் மௌனமாக இரு
என்றார்
அப்படியானால்
மௌனம் நானா
இறைவியிடமும் கேட்டேன்
நான் யார் என்று
அவள் சிரித்தாள்
நானும் இதேக் கேள்வியை
அவரிடம் கேட்டிருக்கிறேன்
அவர் என்னையும்
மௌனமாக இரு என்றுதான் சொன்னார்
என்று ஆர்ப்பரித்துச் சிரித்தாள்
அப்போது அபூர்வமான மலர்கள்
தெய்வீக மணத்தோடு
உலகமெங்கும்
மலையென சொறிந்தன
நான் அந்த மலர்களில் ஒருவனாகக்
மலர்ந்திருந்தேன்
என் மீது மலர்கள் போர்த்து
மறைத்தன
தனுஷ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)