செவ்வாய், 31 மார்ச், 2009

மனம் வேண்டும்

கவிதை வேண்டும் கடவுள் வேண்டும்
சாதல் இல்லா வாழ்வும் வேண்டும்
காலம் முழுதும் காதல் வேண்டும்

மனம்கவர் மங்கை அருகே வேண்டும்
மாலை யானால் அளவாய் மதுவும் வேண்டும்
கண்மூடும் கணப் பொழுதில் தூக்கம் வேண்டும்
பற்றும் வேண்டும் பாசம் வேண்டும்
பற்றற்று வாழப் பழக வேண்டும்
பந்த பாசம் எல்லாம் ஓர்நிறை
பாசம் இழந்தால் பந்தம் போனால்
மயிரது உதிர்ந்த மனமது கொண்டு
வாழ்வில் இன்பம் காணவும் வேண்டும்
உயிரிகள் எல்லாம் நமதெனக் காணும்
அன்பினில் தோய்ந்திடும் இன்பம் வேண்டும்

தனுஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக