ஞாயிறு, 6 நவம்பர், 2011

Google

Google

Google

Google

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கவிதை

இரண்டரை வயதும் கிண்டர் கார்டனும்

அவனுக்கு காலை
எட்டு மணி ஆனால்
பயம் சூழ்ந்து கொள்கிறது
தாயின் கழுத்தை இறுக்கிப்
பிடித்துக் கொள்கிறான்
அவள் அவனுக்கு
அங்கு செல்ல வேண்டிய
அவசியத்தை கூறுகிறாள்
அவன் பெரியவனாவதற்கு
தான் இது என்றும்
அவனை அன்போடு
விலக்கி அனுப்புகிறாள்
அவனுக்கு எதுவும் புரியவில்லை
அங்கே பக்கத்திலிருப்பவனைப்
பார்த்தாலே பயம்
அவன் இவனை அடிக்கிறான்
இவனும் ஒரு கட்டத்தில்
அடி தாளாது திருப்பி அடிக்கிறான்
அவன் அடித்ததில்
இவன் முகத்தில் கீறல்
இரத்தம் கோடிட்டது
இவன் அவனைக் கடிக்கிறான்
இருந்தாலும்
மீண்டும்
அம்மாவும் அப்பாவும்
ஏன் இப்படி இந்த
நரகத்திற்கு அனுப்புகிறார்கள்
இன்று காலை
எட்டு மணி
ஆயாவின் கழுத்தை
இறுக கட்டிக் கொள்கிறான்
அப்பாவும் அம்மாவும்
சிரிக்கிறார்கள்
இன்று ஞாயிற்றுக் கிழமை
எங்கும் போக வேண்டாம்
இவன் மகிழ்ச்சியில்
அப்பாவைக் கட்டிக் கொள்கிறான்

தனுஷ்

கவிதை



உயிரின் கவிதை நாம்

நமக்குள்தான் எத்தனை
நெருக்கம்
முகமுறிவு
கருத்து வேறுபாடு
நாம் சண்டையிடுவதற்கு
எந்த காரணமும் தேவையில்லை
எதையும் பேசி தீர்க்கலாம்
என்பதுதான் முதல் அபத்தம்
உணர்வுகளோடு பேசியவர்கள் நாம்
மொழியை கடந்தவர்கள்
குறிப்பால் அனைத்தையும்
உணர்ந்து ஆலிங்கனத்தில்
திளைத்தவர்கள்
எங்கிருந்தோ நெருப்பு
கண்ணுக்குத் தெரியாமல்
உள்ளே நுழைந்து விட்டது
சண்டையே தொடங்கவில்லை
அதற்குள் அந்நியர்கள்
மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள்
நீ பிரிவைப் பற்றிப் பேசுகிறாய்
நான் எங்கிருந்தது நமக்குள்
நட்பு என்கிறேன்
உன் மன அதிர்வு கண்ணிமைகளில்
கண்ணீராக பெருகுகிறது
நீயும் நானும்
உடலும் உயிருமல்லவா
என்கிறேன்
ஒரே பொருள் பிரிக்க முடியாது
அல்லவா என்கிறேன்
நீ என்னை
நீங்கா ஆலிங்கனம் செய்கிறாய்
உயிரின் கவிதை நாம்

தனுஷ்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

பேசாதீர்

எல்லோரும் மௌனமாக
இருப்பதையே விரும்புகிறார்கள்
பேசினால் தப்பித் தவறி
உண்மைகள்
எதிர்கருத்துக்கள்
வெளியாகி விடலாம்
என்று அச்சமுறுகிறார்கள்
இயல்பாக இருப்பதில்
மௌனமும் இயல்புதான்
எனினும்
துகில் உறியப்படுதல்
கண்டும்
மௌனமாக இருப்பதே
சாலச் சிறந்தது
என்கிறார்கள்
எல்லோரும் மௌனமாக
இருப்பதே நீதி என்றும்
சொல்கிறார்கள்
விதிகள் இருக்கிறது
உனக்கேன் வீண் பேச்சு
வாயடைக்கச் சொல்கிறார்கள்
பேசுவதால்
எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள்
பேசி எதற்கு நாம் தண்டிக்கப்பட வேண்டும்
எனவும் பயமுறுத்துகிறார்கள்

தனுஷ்