ஞாயிறு, 6 நவம்பர், 2011

Google

Google

Google

Google

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கவிதை

இரண்டரை வயதும் கிண்டர் கார்டனும்

அவனுக்கு காலை
எட்டு மணி ஆனால்
பயம் சூழ்ந்து கொள்கிறது
தாயின் கழுத்தை இறுக்கிப்
பிடித்துக் கொள்கிறான்
அவள் அவனுக்கு
அங்கு செல்ல வேண்டிய
அவசியத்தை கூறுகிறாள்
அவன் பெரியவனாவதற்கு
தான் இது என்றும்
அவனை அன்போடு
விலக்கி அனுப்புகிறாள்
அவனுக்கு எதுவும் புரியவில்லை
அங்கே பக்கத்திலிருப்பவனைப்
பார்த்தாலே பயம்
அவன் இவனை அடிக்கிறான்
இவனும் ஒரு கட்டத்தில்
அடி தாளாது திருப்பி அடிக்கிறான்
அவன் அடித்ததில்
இவன் முகத்தில் கீறல்
இரத்தம் கோடிட்டது
இவன் அவனைக் கடிக்கிறான்
இருந்தாலும்
மீண்டும்
அம்மாவும் அப்பாவும்
ஏன் இப்படி இந்த
நரகத்திற்கு அனுப்புகிறார்கள்
இன்று காலை
எட்டு மணி
ஆயாவின் கழுத்தை
இறுக கட்டிக் கொள்கிறான்
அப்பாவும் அம்மாவும்
சிரிக்கிறார்கள்
இன்று ஞாயிற்றுக் கிழமை
எங்கும் போக வேண்டாம்
இவன் மகிழ்ச்சியில்
அப்பாவைக் கட்டிக் கொள்கிறான்

தனுஷ்

கவிதை



உயிரின் கவிதை நாம்

நமக்குள்தான் எத்தனை
நெருக்கம்
முகமுறிவு
கருத்து வேறுபாடு
நாம் சண்டையிடுவதற்கு
எந்த காரணமும் தேவையில்லை
எதையும் பேசி தீர்க்கலாம்
என்பதுதான் முதல் அபத்தம்
உணர்வுகளோடு பேசியவர்கள் நாம்
மொழியை கடந்தவர்கள்
குறிப்பால் அனைத்தையும்
உணர்ந்து ஆலிங்கனத்தில்
திளைத்தவர்கள்
எங்கிருந்தோ நெருப்பு
கண்ணுக்குத் தெரியாமல்
உள்ளே நுழைந்து விட்டது
சண்டையே தொடங்கவில்லை
அதற்குள் அந்நியர்கள்
மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள்
நீ பிரிவைப் பற்றிப் பேசுகிறாய்
நான் எங்கிருந்தது நமக்குள்
நட்பு என்கிறேன்
உன் மன அதிர்வு கண்ணிமைகளில்
கண்ணீராக பெருகுகிறது
நீயும் நானும்
உடலும் உயிருமல்லவா
என்கிறேன்
ஒரே பொருள் பிரிக்க முடியாது
அல்லவா என்கிறேன்
நீ என்னை
நீங்கா ஆலிங்கனம் செய்கிறாய்
உயிரின் கவிதை நாம்

தனுஷ்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

பேசாதீர்

எல்லோரும் மௌனமாக
இருப்பதையே விரும்புகிறார்கள்
பேசினால் தப்பித் தவறி
உண்மைகள்
எதிர்கருத்துக்கள்
வெளியாகி விடலாம்
என்று அச்சமுறுகிறார்கள்
இயல்பாக இருப்பதில்
மௌனமும் இயல்புதான்
எனினும்
துகில் உறியப்படுதல்
கண்டும்
மௌனமாக இருப்பதே
சாலச் சிறந்தது
என்கிறார்கள்
எல்லோரும் மௌனமாக
இருப்பதே நீதி என்றும்
சொல்கிறார்கள்
விதிகள் இருக்கிறது
உனக்கேன் வீண் பேச்சு
வாயடைக்கச் சொல்கிறார்கள்
பேசுவதால்
எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள்
பேசி எதற்கு நாம் தண்டிக்கப்பட வேண்டும்
எனவும் பயமுறுத்துகிறார்கள்

தனுஷ்

புதன், 22 டிசம்பர், 2010

Google

Google
நீ என்று புலப்படுவாய்

உனது மௌனம் எனக்குப் புலப்படாதா என்று
அதன் சூட்சும ஓசையின் ஆழத்தில்
பயணித்தேன்.
உனது மௌன மழையின் இடியோசை
மின்னலோடு என்னில் புதைகிறது.
மௌனம் காக்கும் உன் இதழ்களில்
மௌனம் காக்கும் உன் கண்களில்
உட்புதைந்த பொருள் குறித்து
என் ஆன்மா விடை தேடி அலைகிறது.
உன் மௌனம் எனும்
வெட்டவெளி பரப்பில்
தொலைந்து போனவன் நான்.
என்னை நானே தேடிக் கரைந்தேன்.
உன்னில் நான் அகப்படும் அன்று
நீ எனக்குப் புலப்படுவாயா !

தனுஷ்

ஞாயிறு, 4 ஜூலை, 2010

கவிதை

எனது கடவுள்

எனக்குள் இருக்கும் பிசாசிற்குத்
தீனி நான்தான்
எனக்குள் இருக்கும் கடவுளுக்கு
அருந்தக் கொடுப்பேன்
எனது இரத்தத்தை
இறந்த காலம்
அசைபோடுவதற்கும்
நிகழ்காலம்
அனுபவிப்பதற்கும்
இருக்கும் போது
எதிர்காலம் மட்டும் ஏன்
இருளைப் போர்த்துக் கொண்டிருக்கிறது
என்று கடவுளிடம் கேட்டேன்
அப்போதுதான்
என் இருப்பு உனக்கும்
புரியும் என்றார்
கடவுளின் உருவம்
டிராகுலாவின்
பற்களாக இருட்டில்
இரத்தம் சொட்டியது

தனுஷ்
சுயம்


இறைவனிடம் கேட்டேன்
நான் யார்
அவர் மௌனமாக இரு
என்றார்
அப்படியானால்
மௌனம் நானா
இறைவியிடமும் கேட்டேன்
நான் யார் என்று
அவள் சிரித்தாள்
நானும் இதேக் கேள்வியை
அவரிடம் கேட்டிருக்கிறேன்
அவர் என்னையும்
மௌனமாக இரு என்றுதான் சொன்னார்
என்று ஆர்ப்பரித்துச் சிரித்தாள்
அப்போது அபூர்வமான மலர்கள்
தெய்வீக மணத்தோடு
உலகமெங்கும்
மலையென சொறிந்தன
நான் அந்த மலர்களில் ஒருவனாகக்
மலர்ந்திருந்தேன்
என் மீது மலர்கள் போர்த்து
மறைத்தன

தனுஷ்

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

காதல்-அறிமுகம்

அறிமுகமா !
காதலுக்கா !
வெளியே எங்கும் சொல்லாதீர்கள்
காதல்தான் அனைத்துமே
காதல்தான் ஆன்மா
காதல்தான் கடவுள்
காதல்தான் எங்கும் நீக்கமற நிறைந்த பொருள்
காதலை அறிந்துகொண்ட பினதான்
நான் மனிதன் என்ற உணர்வினைக் கற்றேன்
நீ இன்றி ஒரு அணுவும் இல்லை
அசைவும் இல்லை
நீதான் எல்லாமே
உன் நினைவே என்னை உத்வேகப்படுத்துகிறது
நீயே அருந்தும் அமுதம்
நீயே அட்சயப் பாத்திரம்
நீயே அனைத்திற்கும் முதல்
நீயே அனைத்திற்கும் எல்லை
நீதான் மனித இனத்தின் மறு உற்பத்திக்கு
ஆதாரமாகிறாய்
காதல் என்ற மொழி ஒன்றே போதும்
மானுடம் பிழைத்துக் கொள்ளும்
காதலுக்கு மறுபெயர் சூட்டினால்
அன்பு என்றும் அன்னை என்றும்
மாறுகிறது.
அன்பே என்று அணைக்கக் கன்னியும்
அம்மா என்று அழைக்க அன்னையும்
காதலின் கடவுள்கள்
நான் என்னை அறிந்து கொள்வது என்பது
காதலை அறிந்து கொள்வதிலிருந்துதான்
தொடங்குகிறது
எல்லாமே காதல் என்றக்
கொடியினை உயர்த்திப் பிடிப்போம் வாரீர் !


தனுஷ்

வியாழன், 9 ஏப்ரல், 2009

நட்பும் மழையும்

நீ என்று வருவாய் தெரியாது
உன் அன்பின் குளுமை இன்னும்
என் உதடுகளில் ஈரமாகவே உள்ளது.
உனக்கான காத்திருப்பு கவித்துவமானது
எல்லா நொடிகளிலுமே
உன் நினைவு
சுகந்தமாக என்னைச் சுற்றி வருகிறது.
நான் வாழ்வதின் அர்த்தம் நீ
எனக்காக எதுவும் இல்லை என்று
நினைக்கும் போதெல்லாம் நீ
இருப்பதை நினைக்கும் போது
வாழ்வின் மீதான பிடி இறுகிப்போகிறது.
அர்த்தமற்ற பயணம் தொடங்கிய இடத்திலேயே
என்றோ நின்று போனதை
காலங்கடந்த பின் நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவு மட்டும்தான் ஆறுதல்
பயணத்திற்கான தயாரிப்பே உன்னை
மையமாக்கித்தான்
என்று வருவாய் ஒரு மழை போல
குடைகளை தூக்கி எறிந்து விட்டு
வீதியில் உன்னில் நனைவதற்காக
காத்திருக்கிறேன்

தனுஷ்